ஆதார் கார்டுடன் செல்போன் எண்ணை இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என்ற தகவல்கள் பரவியதால், இ-சேவை மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். சமீபத்தில், ரேஷன் கடையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகை வைக்க வேண்டும், இல்லாவிட்டால் அரிசி கிடைக்காது என வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.