பருவமழையின்போது தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சாரத் துறைக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும், பராமரிப்புக்காக மின்சாரம் நிறுத்தப்படும் தகவலை முன்கூட்டியே SMS மூலம், மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் யோசனை வழங்கினார்.