சென்னை: பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதி செய்யாத அரசு - அண்ணாமலை சாடல்

66பார்த்தது
சென்னை: பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதி செய்யாத அரசு - அண்ணாமலை சாடல்
ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவலநிலை ஆட்சி தான் இந்த திராவிட டிசாஸ்டர் மாடல், என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்றுவரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே? ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவலநிலை ஆட்சி தான் இந்த திராவிட டிசாஸ்டர் மாடல்" என்று அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி