சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர் அப்பாவு சந்தித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. எனவே, இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்ற சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.