சென்னையிலும் கடல் மேல் பாலம்: திட்ட அறிக்கை குறித்து தகவல்

60பார்த்தது
சென்னையிலும் கடல் மேல் பாலம்: திட்ட அறிக்கை குறித்து தகவல்
மும்பையின் அடல் சேது பாலம் போல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கலங்கரை விளக்கம் முதல் - நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைக்கவும், திருவான்மியூர் முதல் அக்கரை வரை மேம்பாலம் அமைக்கவும் ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, இலங்கை- இந்தியா இடையில் பாலம் அமைக்கப்படுமா? சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நவீன மும்பையில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்ட அடல் சேது பாலம் போல், தமிழகத்தில் பட்டினப்பாக்கம் முதல் மகாபலிபுரம் வரையில் கடல் மேல் பாலம் அமைக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் ஒரே இடத்தில் 37 அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதே போல் வாகன நெருக்கடி உள்ள இடங்களில் அந்த நாடுகளின் வல்லுநர்களை அழைத்து ஆலோசனை பெற்று மேற்கொள்ளப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ. வ. வேலு, மும்பையில் அடல் சேது பாலம் போன்று சென்னையில் பாலம் அமைக்கப்படுமா என்று கேட்டுள்ளார். கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிமீ தூரத்துக்கு கடல் மேல் பாலம் அமைக்க சாத்தியம் உள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. உறுப்பினர் பாலாஜி கேட்டுக் கொண்ட வகையில், மாம்பாக்கம் சந்திப்பில் பாலம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி