சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் நேரில் ஆஜராகியுள்ளார். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு அவர் ஆஜரானார்.