சென்னை: வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும்: செல்வப்பெருந்தகை

55பார்த்தது
சென்னை: வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும்: செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை, உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி, தீவிர முனைப்புடன் பிரதமர் மோடி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி மக்கள் தொகையில் 82 சதவீதத்தினருக்கு மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

மேலும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்காத நிலையில் விடுபட்டவர்களையும் சேர்த்து மேலும் 22 கோடி பேர் பயனடையக் கூடிய வாய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி வருகிறது. எனவே, இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை பிரதமர் மோடி தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி