தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், புதிதாக நியமிக்கப்பட்ட சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.