சென்னை: எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் ரூபாய் 100 கோடி மதிப்பில் புதிய மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு ஆராய்ச்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு புதிதாக தோன்றும் நோய்கள், தன்மைகள், முறைகள் ஆய்வு செய்யப்படும் என்றார்.