சென்னை: மாநகர பேருந்தில் வேதிப்பொருள் கொண்டு சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிராட்வேயில் இருந்து கோவளம் சென்ற பேருந்தை வழிமறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் பயணி ஒருவர் சுமார் 10 கிலோ வேதிப்பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேப்பகுதியில் ஆட்டோவில் கடத்தப்பட்ட நட்சத்திர ஆமைகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.