சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மோசடி; 3 பேர் கைது

68பார்த்தது
சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மோசடி; 3 பேர் கைது
சென்னை சந்தோஷபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், சிந்தாதிரிப்பேட்டை ராஜகோபால் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (42) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் சென்னை மாநகராட்சியில் உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், தான் நினைத்தால் சென்னை மாநகராட்சியில் இன்ஸ்பெக்டர் பணி உள்பட பல்வேறு பணிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். எனக்கு மாநகராட்சியில் இன்ஸ்பெக்டர் பணி பெற்றுத் தருவதாக கூறினார். 

இதை உண்மை என நம்பி 3 தவணைகளாக ரூ. 12 லட்சம் கொடுத்தேன். இவர்கள் 3 பேரும் அடுத்த 10 மாதங்களில் எனக்கு தற்போது செய்து வரும் வேலையை விட, உயர்ந்த பதவி காலியாக உள்ளதாக கூறி மேலும் ரூ. 4 லட்சம் கேட்டனர். நான் கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, போலீஸார் நடத்திய விசாரணையில் வெங்கடாச்சலம் அளித்த புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜோஷிதா, ஜெயச்சந்திரன், ரேவதி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ஜெயச்சந்திரன் பாஜக அடையாள அட்டை வைத்துள்ளார். அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்தி