சென்னையில் கிண்டி, நந்தனம், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, தேனாம்பேட்டை, தி. நகர் உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு, திருச்சி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.