சென்னையில் இருந்து கோவாவிற்கு ரயில் இயக்க கோரிக்கை

81பார்த்தது
சென்னையில் இருந்து கோவாவிற்கு ரயில் இயக்க கோரிக்கை
இந்தியாவில் இளைஞர்கள் முதல் முதியோர்கள், இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரும் சுற்றுலா செல்லக்கூடிய மிகப் பிரசித்தி பெற்ற இடமாக இருப்பது கோவா. தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் தங்களது விடுமுறையை கொண்டாட கோவாவிற்கு சுற்றுலா செல்வது வழக்கம். இந்த நிலையில் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக்கு முன்பு வரை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து கோவாவிற்கு வாரம் ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த ரயில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து கோவா வாஸ்கோடகாமா ரயில் நிலையம் வரை வாரத்தில் ஒரு நாள் இயக்கப்பட்டு வந்தது. கோவா செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கலாம். ஆனால் பயண கட்டணம் உள்ளிட்ட காரணங்களுக்காக நடுத்தர மக்களால் செல்ல முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கோவாவிற்கு இயக்கப்பட்டு வந்த ரயில் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தெற்கு ரயில்வேயிற்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை: இந்த நிலையில் இந்த ரயிலுக்கு பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கொரோனா சமயத்தில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு ரயில் சேவை துவங்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி