ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்களை விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை சரியான எடையில் பாக்கெட்டுகளில் வழங்கப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் தொகுதிக்கு ஒரு கடையில் இத்திட்டத்தை தொடங்கவும், மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எடை குறைவாக பொருள்கள் வழங்குவதாக புகார் எழுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.