சென்னை: கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

64பார்த்தது
சென்னை: கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
சென்னைக்கு ரயில் மூலம் வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக, வடக்கு மண்டல காவல் துறையின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேற்று மதியம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை பெரம்பூர் வந்த ரயிலில், 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ராஜு என்பவரை, போலீசார் கைது செய்தனர். மாற்றுத்திறனாளியான அவரிடம் விசாரித்ததில், ஒடிசாவில் தெரிந்த நபரிடம் ஒரு கிலோ கஞ்சாவை 5,000 ரூபாய்க்கு வாங்கி வந்து, அறிமுகமான நபர்களுக்கு ஒரு கிலோ 10,000 ரூபாய்க்கு விற்று வந்தது தெரியவந்தது. போலீசார் ராஜுவை கைது செய்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி