சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக சாந்தோம் நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு ஒரு வழிப்போக்குவரத்து முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
சென்னை, சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கார்ணீஸ்வரர் கோவில் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஒரு வழிப்போக்குவரத்து முறையானது கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது, சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்த நிலையில், நெரிசல் இல்லாத நேரங்களில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூப் சாலையில் மீண்டும் இருவழிப் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
நெரிசல் மிகுந்த நேரங்களான காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஒரு வழிப்போக்குவரத்து வழக்கம்போல் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.