உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராடுங்கள்: இபிஎஸ்

76பார்த்தது
உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராடுங்கள்: இபிஎஸ்
உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராட வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், இந்த தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்காதது தோல்வி அடைந்ததற்கு காரணம் என்று தெரிவித்தனர். பின்னர் பேசிய பழனிசாமி, சிவகங்கை தொகுதியில் 4 சட்டப் பேரவை தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் 2ம் இடத்தையும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3ம் இடத்தையும் பிடித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவு வேறு, சட்டப்பேரவை தேர்தல் முடிவு வேறு. 2026 சட்டப்பேரவை தேர்தல் நமக்குச் சாதகமாக இருக்கும். அதை மனதில் வைத்து நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்தோடு பணியாற்ற வேண்டும்.

ஊராட்சி, பேரூராட்சிகளில் கிளை கழக அளவில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்து போராட்டங்களை நடத்த வேண்டும். கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் மகளிருக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே. பி. முனுசாமி, எஸ். பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி