சென்னை: எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவி பிரிவு

78பார்த்தது
சென்னை: எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவி பிரிவு
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்காக சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக பிரத்யேகமாக 'தகவல் தொழில்நுட்ப வெளியும்' ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) சார்பில் 'உமாஜின் தமிழ்நாடு 2025' என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. சென்னையில் 3-வது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார். 

தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார். அப்போது பேசிய முதல்வர், கோவையில் ஏஐ தொழில்நுட்பத்துக்காக 2 மில்லியன் சதுர அடியில் 'தகவல் தொழில்நுட்ப வெளி'யையும் நிறுவவுள்ளோம். புத்தொழில் நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோருக்கும் வழிகாட்டும் வகையில் புதிய தொழில்நுட்ப கொள்கையும் விரைவில் வெளியிடப்படும். டிஜிட்டல் யுகத்தில் மக்களுடைய அனைத்து பயன்பாடுகளுமே டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும். இதனால் அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) சைபர் பாதுகாப்புக்காக தொழில்நுட்ப உதவிப் பிரிவும் ஏற்படுத்தப்படவுள்ளது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி