கிண்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த பைக், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்ற இளைஞர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு இளைஞர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக கிண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.