தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களின் 169 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், திமுக எம்பி வில்சன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.