வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய அறக்கட்டளை: நீதிமன்றம் உத்தரவு

82பார்த்தது
வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய அறக்கட்டளை: நீதிமன்றம் உத்தரவு
அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய அறக்கட்டளைக்கு எதிராக சேப்ளாநத்தம் கிராம பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சுத்த சன்மார்க்க நிலையம் என்ற அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் செல்வராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி. டி. ஆஷா மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி