சென்னை அருகே ஆழ்வார் திருநகர் மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த வாலிபர் வயது 22. அவரது மனைவி 21 வயது. வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணம் ஆகி 4 வருடம் ஆகிய நிலையில் சம்பவத்தன்று வாலிபர் பெயிண்டிங் வேலைக்கு சென்று விட்டார்.
குழந்தையுடன் தனியாக இருந்த மகளிடம் வாலிபரின் தந்தை சரவணன் மருமகள் என்றும் பாராமல் ஆசிட், பிளேடு போன்ற ஆபத்தானவைகளை காட்டி மிரட்டி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி உள்ளார். இதுகுறித்து கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சரவணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர் கோயம்பேடு போலீசார்.