சென்னை: ரூ. 70000 கோடியை கடனுக்கு வட்டியாக செலுத்துகிறது அரசு.. சீமான்

79பார்த்தது
சென்னை: ரூ. 70000 கோடியை கடனுக்கு வட்டியாக செலுத்துகிறது அரசு.. சீமான்
2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, அரக்கக் குணமும், இரக்கமற்ற மனமும் கொண்ட அரசு உருவாக்கியுள்ள வெற்று நிதிநிலை அறிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொலைநோக்கு பார்வையற்ற, மக்களுக்கு எந்த பயனும், நன்மையும் தராத வெற்று அறிக்கையாகும். தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1000 இடங்களில் இந்த வெற்று அறிக்கையை ஒளிபரப்ப பல இலட்ச ரூபாய் மக்கள் வரிப்பணமும் இதற்காக வீணடிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தனது ஆட்சி செயற்பாட்டு வரைவில் முன்வைத்த மூத்த குடிமக்கள் பராமரிப்புக்கான 'அன்புச்சோலை' என்ற முதியோர் பாதுகாப்புத் திட்டத்தைப் பெயரைக் கூட மாற்றாமல் அப்படியே அறிவித்துள்ள திமுக அரசுக்கு, இத்திட்டம் கடந்த 4 ஆண்டுகளில் நினைவுக்கு வராமல் போனது ஏன்? ஆட்சி முடியும் தருவாயில் தான் திமுக அரசுக்கு மக்கள் மீது அன்பு வருகிறதா?

மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் தேர்தலை மட்டுமே குறியாக கொண்டு சாத்தியமற்ற வாக்குறுதிகளோடு திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லாத, கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி