அனைத்து பள்ளிகளில் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்: முதல்வர்

68பார்த்தது
பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்றத்தடுப்பு மற்றும் தழுவல்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3. O இன்று (பிப். 5) துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து, தமிழக அரசு எடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக என்னுடைய தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் குறித்து ஆராய, இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழகம் தான். அதுமட்டுமின்றி, துறையின் பெயரையே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்று மாற்றியிருக்கிறோம்.

வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால், ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி