நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை என்பது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை பங்கு பெற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.