நடிகர் R. K. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக போலீஸ் மீண்டும் சம்மன்

175பார்த்தது
நடிகர் R. K. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக போலீஸ் மீண்டும் சம்மன்
ஆருத்ரா மோசடியில் தலைமறைவாக உள்ள நடிகர் ஆர். கே. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக போலீஸ் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இண்டர்போல் உதவியுடன் துபாய் நாட்டில் பதுங்கியுள்ள ஆருத்ரா நிறுவன இயக்குநர்களை பிடிக்க போலீஸ் தீவிரம். ரூ. 2, 438 கோடி ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி செய்த ரூ. 500 கோடி துபாயில் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ. 500 கோடி வரை துபாயில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கண்டுபிடித்தது.

சொத்துகளை முடக்க துபாய் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளது. மோசடி பணத்தில் வாங்கிய பல கோடி ரூபாய் மதிப்பிலான 127 சொத்துகளில் 60 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 102 கோடி முடக்கப்பட்டுள்ளது; ரூ. 6. 5 கோடி பணம், 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி