தமிழகத்தின் மற்றும் புதுச்சேரி உட்பட40 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று காலை தி. நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணி மூலம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் தி. நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி உடன் இருந்தார்.