யூடியூபில் பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் பேசலாமா? என யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதாக, பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் அவதூறாக பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.