சென்னை சவுக்கார்பேட்டை, முல்லா தெருவைச் சேர்ந்தவர் அருள்(24). இவர், கடந்த 13ம் தேதி வீட்டில் துாங்கியபோது, இவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்து 26, 000 ரூபாய், மொபைல் போன் ஆகியவை திருடு போயின.
யானைக்கவுனி போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட கல்யாணபுரத்தைச் சேர்ந்த தினேஷ்(26), என்பவரை கைது செய்தனர். மொபைல் போன் மற்றும் 8, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.