சென்னை: 3, 274 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

52பார்த்தது
சென்னை: 3, 274 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு
தமிழகத்தில் சென்னை மாநகர், சென்னை, கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, நெல்லை ஆகிய 8 போக்குவரத்து கழகங்களில், டிரைவர், கன்டக்டர் உள்பட 3,274 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தத் தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை http://arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது 24 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் 45 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும் மற்றும் இதர வகுப்பினர் 55 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும். 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்ச 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை மற்றும் நடத்துநர் உரிமம் 2025ம் ஆண்டு ஜனவரி 1க்கு முன்பாக பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ. மற்றும் எடை குறைந்தபட்சம் 50 கிலோ கிராம் இருக்க வேண்டும். தெளிவான குறைபாடுகளற்ற கண்பார்வை பெற்றிருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. ரூ.590 கட்டணமாகவும், இதர பிரிவினர் ரூ.1,180 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி