சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கு.. காவல் ஆணையர் விளக்கம்

59பார்த்தது
சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கு.. காவல் ஆணையர் விளக்கம்
எஃப்ஐஆர் கசிவு தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேற்று (டிசம்பர் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எஃப்ஐஆர் இப்படி பதிவு செய்திருக்க வேண்டும், அப்படி பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்ஐஆர். இந்த வழக்கில் அப்படித்தான் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தோம். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனால் பாதிக்கப்பட்டதாக வேறு எந்த பெண்களிடத்தில் இருந்தும் காவல் துறைக்கு புகார் வரவில்லை. 

ஞானசேகரனை கஸ்டடியில் எடுத்து விசாரித்து, போன் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் புகார்கள் பெறப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது. அதிலிருந்து ஆதாரங்கள் கிடைத்தன. இந்த வழக்கைப் பொறுத்தவரை மாலை 4 மணிக்கு புகார் அளித்தனர். அதிலிருந்து அடுத்த நாளுக்குள் எஃப்ஐஆர் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி