சென்னை: மக்களே உஷார்.. இடி மின்னலுடன் மழை

62பார்த்தது
சென்னை: மக்களே உஷார்.. இடி மின்னலுடன் மழை
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 8) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், மதுரை, தேனி, தென்காசி ஆகிய 16 மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை எச்சரித்துள்ளது. 

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி