அசைக்கவே முடியாத சக்தி பாஜக என்று மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் நொறுக்கப்பட்டுள்ளதாக தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக, இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய நிலைக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.