மாணவர்களுக்கு ₹1000 வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தை கோவையில் வருகிற 9ஆம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், படிப்பு மட்டும் தான் மாணவர்களின் கவனத்தில் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், 'புதுமைப்பெண்' திட்டத்தால் 2. 73 லட்சம் மாணவிகள் பயன்பெறுவதாக பேசியுள்ளார்.