பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்பட்ட வழக்கில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யூடியூபர் சவுக்குசங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சிறைக்குள் சென்ற போது, நல்ல நிலையில் இருந்ததாகவும், சிறையில் தாக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் என ஈபிஎஸ் கூறியுள்ளார். இந்நிலையில் அதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.