11 வருடத்திற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அண்ணன் மு.க.அழகிரியை வீட்டிற்கு சென்று சந்தித்ததால் திமுகவில் மாற்றம் வருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில், மு.க.அழகிரி நான் இனி அரசியலுக்குள் வரவில்லை. ஆனால், நிச்சயம் உனக்கு உறுதுணையாக நிற்பேன் என ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளாராம். மேலும், தனது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.