கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.