தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, குமரி, நெல்லை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், கோவை, சென்னை, காஞ்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.