தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.