தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை,திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.