மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அவற்றி சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (பிப்.,15) தொடங்குகின்றன. இந்தத் தேர்வை நாடு முழுவதும் உள்ள 8ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7 ஆயிரத்து 842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன.