திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பிளஸ்-1 வரை படித்து விட்டு, 'கேட்டரிங் சர்வீஸ்' வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திருப்பூரில் நடத்த திருமண விழாவிற்கு மேடை அலங்காரத்திற்கு வந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. நீண்ட நாட்கள் காதலை வளர்த்த இருவரும், கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பெண்ணை போக்சோவில் கைது செய்துள்ளனர்.