சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொங்கல் தொகுப்பு வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ஏன் வழங்கவில்லை?. இதனை நம்பி இருந்த மக்களுக்கு ரூ.500 கூட வழங்க முடியாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “அண்ணா பல்கலை., மாணவி வழக்கில் ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். எதிர்கட்சிகளின் போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிப்பதில்லை” என்றார்.