திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முருகனை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சுவாமி தரிசனத்திற்காக மலையேறும் பக்தர்களுக்கு கோயில் தேவஸ்தான மூலம் இலவசமாக மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மோர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.