மும்பை கலினா பகுதியில், ஏர்இந்தியா நிறுவனத்தில் வேலை காலியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதையடுத்து, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. தூய்மைப்பணி, பழுதுநீக்கம் போன்ற சுமார் 2,000 பணியிடங்களுக்கு, நேர்முக தேர்வுக்காக அவர்கள் படையெடுத்ததால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இளைஞர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். கடைசியில், Resume-வை கொடுத்துவிட்டு சென்றனர்.