காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் எல்லை மாநிலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மராட்டிய ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த சிப்பாய் சச்சின் வனான்ஜி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.