சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இந்த மிரட்டலை விடுத்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.