தெர்மல் கேமரா மூலம் உடல்களை தேடும் பணி

75பார்த்தது
தெர்மல் கேமரா மூலம் உடல்களை தேடும் பணி
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை தெர்மல் டிரோன் கேமராக்கள் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது. நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலை பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிலத்தில் புதைந்துள்ள உடல்களின் வெப்பத்தை வைத்து கண்டறியும் டிரோன் கேமராக்கள் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி