கன்னியாகுமரி: நிலையற்ற நீர் மட்டம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளுவர் சிலை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக கரைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். விடுமுறை தினமான இன்று அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த நிலையில், படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.