ஒரு மனிதன் சுமார் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும், இல்லையெனில் பெரும் ஆபத்து என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல், அதிகம் தூங்குவதும் ஆபத்தானது தான். அதிக நேரம் தூங்கினால், உங்கள் இதயத்துக்கு ஆபத்து. இது கரோனரி தமனி நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், தலைவலி, மனச்சோர்வு, உடல் பருமன் போன்றவை ஏற்படும். மேலும், இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே அதிக நேரம் தூங்குவதை தவிர்த்து உடலுக்கு தேவையான அளவு மட்டும் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுவது நல்லது.